சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோர விபத்து ராஜஸ்தானில் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருக
திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
தீப்பிடித்த சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும் தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்துக் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி இழப்பீடும் அறிவித்துள்ளார்.
சாலையில் திடீரென தீப்பிடித்த பேருந்து ;20 பேர் உயிரிழப்பு சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்து ராஜஸ்தானில் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. ராஜஸ்தான் ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருகதிடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.தீப்பிடித்த சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்துக் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி இழப்பீடும் அறிவித்துள்ளார்.