இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று மரத்துடன் மோதியதில் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் சிலாபம் - புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (4) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளது.
அதன்போது திடீரென வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரத்துடன் மோதிய இ.போ.ச பேருந்து- 21 பேர் மருத்துவமனையில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று மரத்துடன் மோதியதில் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் சிலாபம் - புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (4) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளது. அதன்போது திடீரென வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.