• Jun 08 2025

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தாய்லாந்து பணயக் கைதியின் சடலம் மீட்பு..!

shanuja / Jun 8th 2025, 5:24 pm
image

ஹமாஸ் படையினரால்  கடந்த 2023 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பணயக் கைதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று  இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 


இது தொடர்பில்  இஸ்ரேல் நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, 


தாய்லாந்தைச் சோ்ந்த நத்தாபோங் பிண்டாவின் சடலம் மீட்கப்பட்டு இஸ்ரேலுக்கு திருப்பி கொண்டு வரப்பட்டது. சிறப்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் அந்த உடல் மீட்கப்பட்டது.


உயிருடன் கடத்திச் செல்லப்பட்ட அவர், ஹமாஸ் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார். 


இரண்டு நாட்களுக்கு முன்னர்  இரு இஸ்ரேல்-அமெரிக்க பணயக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


தற்போது காஸாவில் 55 பணயக் கைதிகள் உள்ளனர். அவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனர்  என்று இஸ்ரேல்  பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தாய்லாந்து பணயக் கைதியின் சடலம் மீட்பு. ஹமாஸ் படையினரால்  கடந்த 2023 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பணயக் கைதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று  இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்  இஸ்ரேல் நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, தாய்லாந்தைச் சோ்ந்த நத்தாபோங் பிண்டாவின் சடலம் மீட்கப்பட்டு இஸ்ரேலுக்கு திருப்பி கொண்டு வரப்பட்டது. சிறப்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் அந்த உடல் மீட்கப்பட்டது.உயிருடன் கடத்திச் செல்லப்பட்ட அவர், ஹமாஸ் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர்  இரு இஸ்ரேல்-அமெரிக்க பணயக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது காஸாவில் 55 பணயக் கைதிகள் உள்ளனர். அவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனர்  என்று இஸ்ரேல்  பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement