அகதிகள் 97 பேர் பயணித்த படகொன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் லிபியாவில் இருந்து படகில் மத்திய தரைக்கடல் வழியாக 97 பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக நுழையும் பயணத்தை நேற்று மேற்கொண்டனர்.
குறித்த படகு இத்தாலியின் லெபிடுசா தீவு அருகே சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர். விபத்து குறித்து தகவலறிந்த இத்தாலி கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணியில் 60 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும் கடலில் மூழ்கியதில் 20 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 20 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மிகுதி 17 பேரின் நிலை என்ன? என்று தெரியாத நிலையில் அவர்களைத் தேடும் பணியில் இத்தாலி கடற்படை தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
அகதிகள் 97 பேருடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 26 பேர் பலி - 60 பேர் மீட்பு தேடுதல் பணிகள் தீவிரம் அகதிகள் 97 பேர் பயணித்த படகொன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.இந்த நிலையில் லிபியாவில் இருந்து படகில் மத்திய தரைக்கடல் வழியாக 97 பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக நுழையும் பயணத்தை நேற்று மேற்கொண்டனர். குறித்த படகு இத்தாலியின் லெபிடுசா தீவு அருகே சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர். விபத்து குறித்து தகவலறிந்த இத்தாலி கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.மீட்புப் பணியில் 60 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும் கடலில் மூழ்கியதில் 20 அகதிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 20 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மிகுதி 17 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில் அவர்களைத் தேடும் பணியில் இத்தாலி கடற்படை தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.