இந்த விபத்து தொடர்பாக அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பழைய கட்டிடங்களின் பாதுகாப்பு நிலை குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இந்த சம்பவம் மூலம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ராணுவ சிப்பாய் பலி மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நேற்று (17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பழைய கட்டிடமொன்றின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததே இந்த விபத்திற்குக் காரணமாகும்.இவ்வாறு உயிரிழந்தவர் மாதிவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவராகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்த சிப்பாயின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் மார்ச்சரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பாக அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பழைய கட்டிடங்களின் பாதுகாப்பு நிலை குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இந்த சம்பவம் மூலம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.