• May 23 2025

யாழில் மனவிரக்தியால் முதியவர் எடுத்த விபரீத முடிவு..!

Sharmi / May 22nd 2025, 8:40 am
image

யாழில் மனவிரக்தியடைந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளளது.

மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த 74 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நண்பகல் வீட்டுக்கு அருகேயுள்ள மரத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழில் மனவிரக்தியால் முதியவர் எடுத்த விபரீத முடிவு. யாழில் மனவிரக்தியடைந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளளது.மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த 74 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த முதியவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நண்பகல் வீட்டுக்கு அருகேயுள்ள மரத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement