• Feb 06 2026

பாலம்பிட்டி பிரதான வீதியில் உயிருக்கு போராடிய யானை!

dileesiya / Feb 6th 2026, 3:12 pm
image

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலம்பிட்டி பிரதான வீதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று (6) காலை முதல் உயிருக்கு போராடி வருகிறது.

 

சுமார் 10 வயது மதிக்கத்தக்கதாக கூறப்படுகின்ற குறித்த யானை எழும்பி நடக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்றைய தினம்  (5) இரவு குறித்த பகுதிக்கு யானை கூட்டம் ஒன்று வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


மன்னார் பாலம்பிட்டி கிராமத்தில் யானைகளுக்கு இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவம் ஆனது இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றுள்ளது


யானைகள் சண்டை போடுவதை அவதானித்த வயல் காவலுக்கு இருந்த விவசாயிகள் குறித்த இடத்துக்கு சென்ற போது  யானைகள் தப்பித்ததாகவும்  ஒரு யானை பாரி காயங்களுடன் காணப்பட்டதாகவும்  விவசாயிகள்  கூறுகின்றனர்.


குறித்த விடயம் தொடர்பாக கிராம சேவையாலருக்கு தெரியப்படுத்தி சம்பவ இடத்துக்கு கிராம சேவையாளரும் வனஜிவராசிகள் திணைக்களத்தினர் வருகை தந்து காத்துக்கு உள்ளனர். யாணைக்கு  சிகிச்சை  அளிக்கப்படுகின்றது.


குறித்த யானையை அப் பகுதியூடாக செல்லும் மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாலம்பிட்டி பிரதான வீதியில் உயிருக்கு போராடிய யானை மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலம்பிட்டி பிரதான வீதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று (6) காலை முதல் உயிருக்கு போராடி வருகிறது. சுமார் 10 வயது மதிக்கத்தக்கதாக கூறப்படுகின்ற குறித்த யானை எழும்பி நடக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்றைய தினம்  (5) இரவு குறித்த பகுதிக்கு யானை கூட்டம் ஒன்று வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மன்னார் பாலம்பிட்டி கிராமத்தில் யானைகளுக்கு இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் ஆனது இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றுள்ளதுயானைகள் சண்டை போடுவதை அவதானித்த வயல் காவலுக்கு இருந்த விவசாயிகள் குறித்த இடத்துக்கு சென்ற போது  யானைகள் தப்பித்ததாகவும்  ஒரு யானை பாரி காயங்களுடன் காணப்பட்டதாகவும்  விவசாயிகள்  கூறுகின்றனர்.குறித்த விடயம் தொடர்பாக கிராம சேவையாலருக்கு தெரியப்படுத்தி சம்பவ இடத்துக்கு கிராம சேவையாளரும் வனஜிவராசிகள் திணைக்களத்தினர் வருகை தந்து காத்துக்கு உள்ளனர். யாணைக்கு  சிகிச்சை  அளிக்கப்படுகின்றது.குறித்த யானையை அப் பகுதியூடாக செல்லும் மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement