• Jun 22 2025

ஈரானை அதிரடியாக தாக்கிய அமெரிக்கா; அலறும் உலக நாடுகள்! தீவிரமடையும் போர் பதற்றம்!

Chithra / Jun 22nd 2025, 10:56 am
image


அமெரிக்கா நேற்று அதிகாலை மூன்று அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்கள் நடந்ததை ஈரானின் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

"ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்தி உள்ள தாக்குதல்கள் மூலம் அங்கே அணுக்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதையடுத்து ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். 

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப் , 


"ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும். 


தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. 

மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால், எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும்" என்று கூறினார்.


அமெரிக்கப் படைகள் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின்  ஈரான் மீதான தாக்குதல் உலக சமாதானத்திற்கு நேரடியான அபாயம் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் அபாயகரமான முன்னேற்றம் என்றும், உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் நேரடியான அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

ஈரானை அதிரடியாக தாக்கிய அமெரிக்கா; அலறும் உலக நாடுகள் தீவிரமடையும் போர் பதற்றம் அமெரிக்கா நேற்று அதிகாலை மூன்று அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்கள் நடந்ததை ஈரானின் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது."ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஈரான் மீது அமெரிக்கா நடத்தி உள்ள தாக்குதல்கள் மூலம் அங்கே அணுக்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதையடுத்து ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப் , "ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும். தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால், எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும்" என்று கூறினார்.அமெரிக்கப் படைகள் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பாராட்டியுள்ளார்.இந்நிலையில் அமெரிக்காவின்  ஈரான் மீதான தாக்குதல் உலக சமாதானத்திற்கு நேரடியான அபாயம் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் அபாயகரமான முன்னேற்றம் என்றும், உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் நேரடியான அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement