• Apr 15 2026

அமரகீர்த்தி அத்துகோரல வழக்குத் தீர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய உறவினர்கள் முடிவு!

Chithra / Feb 23rd 2026, 2:03 pm
image

 

நாடாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய உள்ளதாக பிரதிவாதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


இன்று இது தொடர்பாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ஒருவருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.


நாங்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து, எமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து எழுத்துமூலமாக கடிதமொன்றை கையளிப்பதற்காக வந்தோம். அத்துடன் எமது வழக்கு தொடர்பில் மேன்முறையீடு ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளோம். ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமிடம் இருந்து உண்மையில் ஒரு நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்.


அத்துடன் ஜனாதிபதியிடமும் எமக்கு நீதியை வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். தற்போது நாம் மிகவும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளோம் என்றும் பிள்ளைகளுடன் பல தாய்மார்கள் இருக்கிறார்கள். மூவரடங்கிய மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்.


எனினும், ஒரு நீதிபதி இவர்களை குற்றமற்றவர்கள் என விடுவித்தார். அதுதான் எமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்காக இன்னும் ஒரு சந்தர்ப்பம் இருப்பதாக கருதுகிறோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

அமரகீர்த்தி அத்துகோரல வழக்குத் தீர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய உறவினர்கள் முடிவு  நாடாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய உள்ளதாக பிரதிவாதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று இது தொடர்பாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ஒருவருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.நாங்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து, எமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து எழுத்துமூலமாக கடிதமொன்றை கையளிப்பதற்காக வந்தோம். அத்துடன் எமது வழக்கு தொடர்பில் மேன்முறையீடு ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளோம். ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமிடம் இருந்து உண்மையில் ஒரு நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்.அத்துடன் ஜனாதிபதியிடமும் எமக்கு நீதியை வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். தற்போது நாம் மிகவும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளோம் என்றும் பிள்ளைகளுடன் பல தாய்மார்கள் இருக்கிறார்கள். மூவரடங்கிய மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்.எனினும், ஒரு நீதிபதி இவர்களை குற்றமற்றவர்கள் என விடுவித்தார். அதுதான் எமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்காக இன்னும் ஒரு சந்தர்ப்பம் இருப்பதாக கருதுகிறோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement