• Sep 11 2025

இலங்கை- நேபாளம் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

Chithra / Sep 11th 2025, 12:39 pm
image

 

நேபாளத்தில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் மூடப்பட்டிருந்த நேபாள காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-181 இன்று (11) காலை 08.15 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டுவிற்கு புறப்பட்டது.

மேலும் விமானம் இன்று பிற்பகல் 04.40 மணிக்கு நேபாளத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.

நேபாளத்தில் உள்ள காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திற்கு மட்டுமே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்குகிறது.

நேபாளத்தில் நடந்து வரும் மோதல் காரணமாக நாட்டின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான விமானங்களை நேற்று (10) இலங்கை ஏர்லைன்ஸ் நிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, நேபாளத்தின் காத்மாண்டுவிற்கு பயணிக்க நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த சுமார் 35 பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் விடுதி வசதிகளையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கியுள்ளது.

இலங்கை- நேபாளம் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்  நேபாளத்தில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் மூடப்பட்டிருந்த நேபாள காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.அதன்படி, இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-181 இன்று (11) காலை 08.15 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டுவிற்கு புறப்பட்டது.மேலும் விமானம் இன்று பிற்பகல் 04.40 மணிக்கு நேபாளத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.நேபாளத்தில் உள்ள காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திற்கு மட்டுமே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்குகிறது.நேபாளத்தில் நடந்து வரும் மோதல் காரணமாக நாட்டின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான விமானங்களை நேற்று (10) இலங்கை ஏர்லைன்ஸ் நிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தது.அதன்படி, நேபாளத்தின் காத்மாண்டுவிற்கு பயணிக்க நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த சுமார் 35 பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் விடுதி வசதிகளையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement