• Jun 12 2025

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்

Chithra / Jun 10th 2025, 12:41 pm
image


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் காலை முதல் மாலை வரை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அண்மையில் கூட சம்மாந்துறை  விளினியடி சந்தியில்   மாடுகளால் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கரவண்டி  சேதமடைந்ததுடன்  சாரதி காயமடைந்திருந்தார்.

இதுதவிர இன்று மோட்டார் சைக்கிள்கள் இரண்டுடன் கட்டாக்காலி மாடுகள் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள்களை  செலுத்தி வந்த இருவரே கை மற்றும் கால்களில்  காயமடைந்த நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில்  சம்மாந்துறை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகளால் அதிகரிக்கும் விபத்துக்கள் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் காலை முதல் மாலை வரை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.அண்மையில் கூட சம்மாந்துறை  விளினியடி சந்தியில்   மாடுகளால் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கரவண்டி  சேதமடைந்ததுடன்  சாரதி காயமடைந்திருந்தார்.இதுதவிர இன்று மோட்டார் சைக்கிள்கள் இரண்டுடன் கட்டாக்காலி மாடுகள் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.குறித்த மோட்டார் சைக்கிள்களை  செலுத்தி வந்த இருவரே கை மற்றும் கால்களில்  காயமடைந்த நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.சம்பவம் தொடர்பில்  சம்மாந்துறை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement