• May 22 2026

வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் 05 நாட்களாக மாயம்; உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை

Chithra / Oct 23rd 2025, 7:51 pm
image

கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.

26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

வெளிநாடு செல்லவிருந்த நிலையில் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில்  இளைஞனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கடந்த 21 ஆம் திகதி அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் இவரது உறவினர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். 

இவரை கண்டவர்கள் 0771861326 அல்லது 0774604937 என் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் 05 நாட்களாக மாயம்; உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.வெளிநாடு செல்லவிருந்த நிலையில் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அறியமுடிகின்றது.இந்நிலையில்  இளைஞனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கடந்த 21 ஆம் திகதி அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் இவரது உறவினர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். இவரை கண்டவர்கள் 0771861326 அல்லது 0774604937 என் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement