• Jul 27 2025

யாழில் பெருந்தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது - தப்பியோடிய சந்தேகநபர்கள்

Chithra / Jul 26th 2025, 1:23 pm
image


யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் நேற்றைய தினம் இரவு 10 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது 

புலனாய்வு துறையினருக்கும் கடற்படையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வத்திராயன் பகுதி முழுவதும் நேற்றைய தினம் மருதங்கேணி பொலிசாரால்  விசேட சுற்றிவளைப்பு  மேற்கொள்ளப்பட்டது.

இச் சுற்றிவளைப்பில் 34 பொதிகள் அடங்கிய 60.256 kg கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை ஏனைய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றதோடு,

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளினையும் சந்தேக நபரையும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி உள்ளனர்.

 

யாழில் பெருந்தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது - தப்பியோடிய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் நேற்றைய தினம் இரவு 10 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது புலனாய்வு துறையினருக்கும் கடற்படையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வத்திராயன் பகுதி முழுவதும் நேற்றைய தினம் மருதங்கேணி பொலிசாரால்  விசேட சுற்றிவளைப்பு  மேற்கொள்ளப்பட்டது.இச் சுற்றிவளைப்பில் 34 பொதிகள் அடங்கிய 60.256 kg கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை ஏனைய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றதோடு,கைப்பற்றப்பட்ட போதைப்பொருளினையும் சந்தேக நபரையும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி உள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement