• Jun 16 2025

வீட்டு முற்றத்தில் சரிந்து விழுந்த நபர் உயிரிழப்பு: யாழில் துயரம்..!

Sharmi / Jun 16th 2025, 10:37 am
image

யாழில் திடீரென மயங்கி விழுந்து ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி வீட்டில் உணவருந்திவிட்டு இருந்தவேளை நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டு முற்றத்திற்கு வந்தவேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அவசர நோயாளர் காவு வண்டியை அழைத்தவேளை, அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி பணியாளர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டு திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் நேற்றையதினம் அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இதேவேளை சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டு முற்றத்தில் சரிந்து விழுந்த நபர் உயிரிழப்பு: யாழில் துயரம். யாழில் திடீரென மயங்கி விழுந்து ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி வீட்டில் உணவருந்திவிட்டு இருந்தவேளை நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டு முற்றத்திற்கு வந்தவேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.பின்னர் அவசர நோயாளர் காவு வண்டியை அழைத்தவேளை, அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி பணியாளர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டு திரும்பிச் சென்றனர்.இந்நிலையில் நேற்றையதினம் அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இதேவேளை சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement