இரத்தினபுரி - கலவானை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
70 ரூபாய் விலையை கொண்ட 500 மில்லி லிட்டர் குடிநீர் போத்தலை 80 ரூபாய்க்கு விற்றதற்காக கலவானை நீதிவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) நிர்வாகம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு தாமரை கோபுரத்தின் தரை தளத்தில் உள்ள கடை உரிமையாளருக்கு, அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றதற்காக கொழும்பு மேலதிக நீதவான் 100,000 ருபாய் அபராதம் விதித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவு நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், MRP விதிமுறைகளை மீறி, 80 ருபாய்யான 500 மில்லி குடிநீர் பாட்டிலை 150 ருபாய்க்கு விற்றதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதேவேளை, இதுபோன்ற அதிக விலை நிர்ணய சம்பவங்கள் குறித்து முறையிடுமாறு நுகர்வோர் விவகார ஆணையகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம்; பல்பொருள் அங்காடிக்கு அதிரடி உத்தரவு தொடரும் சுற்றிவளைப்பு இரத்தினபுரி - கலவானை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.70 ரூபாய் விலையை கொண்ட 500 மில்லி லிட்டர் குடிநீர் போத்தலை 80 ரூபாய்க்கு விற்றதற்காக கலவானை நீதிவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) நிர்வாகம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.இந்நிலையில் கொழும்பு தாமரை கோபுரத்தின் தரை தளத்தில் உள்ள கடை உரிமையாளருக்கு, அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றதற்காக கொழும்பு மேலதிக நீதவான் 100,000 ருபாய் அபராதம் விதித்துள்ளார்.கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவு நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபர், MRP விதிமுறைகளை மீறி, 80 ருபாய்யான 500 மில்லி குடிநீர் பாட்டிலை 150 ருபாய்க்கு விற்றதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.இதேவேளை, இதுபோன்ற அதிக விலை நிர்ணய சம்பவங்கள் குறித்து முறையிடுமாறு நுகர்வோர் விவகார ஆணையகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.