• Mar 10 2026

இலங்கையின் சுற்றுலாத் துறையில் புதிய புரட்சி - யாழ்ப்பாணத்திற்கு முன்னுரிமை

Chithra / Mar 10th 2026, 6:51 pm
image

 

இலங்கையின் சுற்றுலாத்துறை ஆற்றல்மிக்க இடங்களை அடையாளங்கண்டு, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 2026 – 2028 காலப்பகுதிக்கான விரிவான சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில், பேண்தகு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த முழுமையான அபிவிருத்தித் திட்டத்திற்காக சுமார் 2,667.03 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும், பிராந்திய உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் இது வழிவகுக்கும்.


சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 131.02 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டிலான கருத்திட்டத்திற்குத் திட்டமிடல் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தித் திட்டம் 2026 ஆம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் சுற்றுலாத் துறையில் புதிய புரட்சி - யாழ்ப்பாணத்திற்கு முன்னுரிமை  இலங்கையின் சுற்றுலாத்துறை ஆற்றல்மிக்க இடங்களை அடையாளங்கண்டு, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 2026 – 2028 காலப்பகுதிக்கான விரிவான சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில், பேண்தகு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த முழுமையான அபிவிருத்தித் திட்டத்திற்காக சுமார் 2,667.03 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும், பிராந்திய உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் இது வழிவகுக்கும்.சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 131.02 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டிலான கருத்திட்டத்திற்குத் திட்டமிடல் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தித் திட்டம் 2026 ஆம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement