நீர்கொழும்பு, கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சிலாபத்தில் இருந்து இன்று அதிகாலை 7.15 மணியளவில் கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், கட்டுவ ரயில் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் சுமார் 40 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவரது அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீர்கொழும்பில் ரயில் மோதி மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு நீர்கொழும்பு, கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சிலாபத்தில் இருந்து இன்று அதிகாலை 7.15 மணியளவில் கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், கட்டுவ ரயில் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.விபத்தில் உயிரிழந்தவர் சுமார் 40 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவரது அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.