• Jun 16 2025

இளம் சமூகத்தை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பில் மாணவர்களால் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி

Chithra / Jun 15th 2025, 3:03 pm
image


அதிகரித்துவரும் தற்கொலைகளிலிருந்து இளம் சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் இன்று மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி நடத்தப்பட்டது.

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரின் ஏற்பாட்டிலும் பங்குபற்றுதலுடனும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் கு.பாஸ்கரன் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் இந்த சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலையில் ஆரம்பித்த சைக்கிள் பவனியானது, சவுக்கடி வீதி, விநாயகபுரம் வீதி, முருகன் கோவில் வீதி சென்று ஜனாதிபதி வீதியூடாக பாடசாலையினை வந்தடைந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இளம்வயதினர் தற்கொலைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த சைக்கிள் பவனியின்போது தற்கொலைகளை தடுப்பது குறித்தான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.


இளம் சமூகத்தை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பில் மாணவர்களால் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி அதிகரித்துவரும் தற்கொலைகளிலிருந்து இளம் சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் இன்று மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி நடத்தப்பட்டது.மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரின் ஏற்பாட்டிலும் பங்குபற்றுதலுடனும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் கு.பாஸ்கரன் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் இந்த சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.இதன்போது பாடசாலையில் ஆரம்பித்த சைக்கிள் பவனியானது, சவுக்கடி வீதி, விநாயகபுரம் வீதி, முருகன் கோவில் வீதி சென்று ஜனாதிபதி வீதியூடாக பாடசாலையினை வந்தடைந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இளம்வயதினர் தற்கொலைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த சைக்கிள் பவனியின்போது தற்கொலைகளை தடுப்பது குறித்தான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement