• Jun 23 2025

ரயில் சாரதியின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து; சில மணி நேரம் தடைப்பட்ட மலையக ரயில் சேவை

Chithra / Jun 23rd 2025, 9:14 am
image


வட்டவளைப் பகுதியில் ரயில் பாதையில் மரமொன்று வீழ்ந்தமையால் மலையக ரயில் சேவை சில மணி நேரம் தடைப்பட்டதுடன், பாரிய விபத்தும் சாரதியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் கலபட பகுதிக்கும் வட்டவளை பகுதிக்கும் இடையில் ரயில் பாதையில் நேற்று இரவு 07 மணியளவில் மரமொன்று வீழ்ந்துள்ளது.

இதனால் மதியம் 12.45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயில் சேவை தடைப்பட்டுள்ளது. 

ரயில் சாரதி ரயில் தண்டவாளத்தில் மரமொன்று வீழ்ந்துள்ளதை அவதானித்த நிலையில் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால் ரயில் விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரயிலில் பயணித்த பயணிகள் ரயில் பாதையில் வீழ்ந்து கிடந்த மரத்தை கடும் முயற்சியால் அகற்றியுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த ரயில் சுமார் ஒரு மணித்தியாலங்களின் பின்னர் ஹட்டன், நானுஓயா நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


ரயில் சாரதியின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து; சில மணி நேரம் தடைப்பட்ட மலையக ரயில் சேவை வட்டவளைப் பகுதியில் ரயில் பாதையில் மரமொன்று வீழ்ந்தமையால் மலையக ரயில் சேவை சில மணி நேரம் தடைப்பட்டதுடன், பாரிய விபத்தும் சாரதியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் கலபட பகுதிக்கும் வட்டவளை பகுதிக்கும் இடையில் ரயில் பாதையில் நேற்று இரவு 07 மணியளவில் மரமொன்று வீழ்ந்துள்ளது.இதனால் மதியம் 12.45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயில் சேவை தடைப்பட்டுள்ளது. ரயில் சாரதி ரயில் தண்டவாளத்தில் மரமொன்று வீழ்ந்துள்ளதை அவதானித்த நிலையில் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால் ரயில் விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ரயிலில் பயணித்த பயணிகள் ரயில் பாதையில் வீழ்ந்து கிடந்த மரத்தை கடும் முயற்சியால் அகற்றியுள்ளனர்.அதன் பின்னர் குறித்த ரயில் சுமார் ஒரு மணித்தியாலங்களின் பின்னர் ஹட்டன், நானுஓயா நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement