• Jan 19 2026

அனர்த்தங்களால் சேதமடைந்த ரயில் பாதைகளைப் புனரமைக்க 400 மில்லியன் டொலர் செலவு

Chithra / Dec 15th 2025, 3:32 pm
image

 

அனர்த்தங்களினால் சேதமடைந்த ரயில் பாதைகளைப் புனரமைக்க சுமார் 400 மில்லியன் டொலர் செலவாகும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். 

 

அத்துடன், அனைத்து ரயில்  பாதைகளின் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்குச் சிறிது காலம் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

இதேவேளை, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 236 சுகாதார நிறுவனங்களில் சுமார் 90 சதவீதம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

 

அத்துடன், பதுளை - ஸ்பிரிங்வெலி மற்றும் கந்தேகெதர மருத்துவமனைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

இதேவேளை, கடுமையாகப் பாதிக்கப்பட்ட மஹியங்கனை மற்றும் சிலாபம் மருத்துவமனைகள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

எனினும், அனர்த்தங்கள் காரணமாக மருத்துவமனைகளில் உள்ள சி.டி ஸ்கேனர்கள் போன்ற பல உபகரணங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்களால் சேதமடைந்த ரயில் பாதைகளைப் புனரமைக்க 400 மில்லியன் டொலர் செலவு  அனர்த்தங்களினால் சேதமடைந்த ரயில் பாதைகளைப் புனரமைக்க சுமார் 400 மில்லியன் டொலர் செலவாகும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.  அத்துடன், அனைத்து ரயில்  பாதைகளின் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்குச் சிறிது காலம் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 236 சுகாதார நிறுவனங்களில் சுமார் 90 சதவீதம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.  அத்துடன், பதுளை - ஸ்பிரிங்வெலி மற்றும் கந்தேகெதர மருத்துவமனைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இதேவேளை, கடுமையாகப் பாதிக்கப்பட்ட மஹியங்கனை மற்றும் சிலாபம் மருத்துவமனைகள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  எனினும், அனர்த்தங்கள் காரணமாக மருத்துவமனைகளில் உள்ள சி.டி ஸ்கேனர்கள் போன்ற பல உபகரணங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement