திருகோணமலை – முத்துநகர் பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 25 பேருக்கு பிஸ்கால் சமர்ப்பிக்கப்பட்டு வெளியேற்றும் நடவடிக்கை இன்று (22) இடம்பெற்றது.
திருகோணமலை உப்புவெளி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட முத்துநகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள தகரவெட்டுவான் விவசாய சம்மேளனத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் 25 பேரை வெளியேற்றும் நடவடிக்கை திருகோணமலை நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைய நீதிமன்ற பதிவாளரினால் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் குறித்த விவசாயிகளுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்குத் தீர்ப்பின் பிரகாரம் குறித்த விவசாயிகள் இன்றைய தினம் (22) வெளியேற்றப்பட்டிருந்தனர்.
குறித்த இடத்திற்கு துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர்களுடன் அப்பகுதியில் சோலார் திட்டத்தை மேற்கொள்ளவுள்ள நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த பகுதியில் 1980 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே தாம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்நிலையில் 1984ஆம் காலப்பகுதியில் அமைச்சரவையின் அனுமதி இன்றி குறித்த காணிகள் இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன் குறித்த காணிகளை இந்திய சோலார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளனர். இதனால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எம்மை வெளியேற்றி அக்காணிகளை சோலார் திட்டத்திற்காக வழங்க உள்ளனர்.
இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் முறையிட்டும் எவ்வித ஆக்கபூர்வமான பதில்களும் எமக்கு வழங்கப்படவில்லை. அத்துடன் இன்றைய தினம் இடம்பெறுகின்ற நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனவும், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உத்தியோகபூர்வமான முறையில் குறித்த காணிகள் கையளிக்கப்பட்ட பின்னர் அவற்றை மக்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் இன்றைய தினம் எம்முடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதி ஒருவர் கலந்துரையாடியிருந்தார். அதன் அடிப்படையில் இன்று நாம் எதிர்ப்பு நடவடிக்கை எவற்றையும் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களிடம் தொலைபேசியில் வினவியபோது, நீதிமன்ற நடவடிக்கைக்கு நாம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் இன்றைய தினம் குறித்த காணிகள் அளக்கப்பட்டு இலங்கைத் துறைமுக அதிகாரசபையிடம் கையளிக்கப்படுமேயன்றி இன்று சோலார் நிறுவனத்திற்கு கையளிக்கப்படமாட்டாது எனவும் அவர்கள் அப்பகுதிக்கு செல்லமாட்டார்கள். அத்துடன் அவர்களுக்கு இந்த காணிகளை வழங்குவதா அல்லது இதற்கு பதிலாக வேறு காணிகளை வழங்குவதா என்பது தொடர்பில் பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
திருமலை முத்துநகர் பகுதியில் 25 பேர் துறைமுக அதிகார சபை காணியிலிருந்து வெளியேற்றம். திருகோணமலை – முத்துநகர் பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 25 பேருக்கு பிஸ்கால் சமர்ப்பிக்கப்பட்டு வெளியேற்றும் நடவடிக்கை இன்று (22) இடம்பெற்றது.திருகோணமலை உப்புவெளி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட முத்துநகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள தகரவெட்டுவான் விவசாய சம்மேளனத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் 25 பேரை வெளியேற்றும் நடவடிக்கை திருகோணமலை நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைய நீதிமன்ற பதிவாளரினால் முன்னெடுக்கப்பட்டது.இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் குறித்த விவசாயிகளுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்குத் தீர்ப்பின் பிரகாரம் குறித்த விவசாயிகள் இன்றைய தினம் (22) வெளியேற்றப்பட்டிருந்தனர். குறித்த இடத்திற்கு துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர்களுடன் அப்பகுதியில் சோலார் திட்டத்தை மேற்கொள்ளவுள்ள நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.குறித்த பகுதியில் 1980 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே தாம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்நிலையில் 1984ஆம் காலப்பகுதியில் அமைச்சரவையின் அனுமதி இன்றி குறித்த காணிகள் இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் குறித்த காணிகளை இந்திய சோலார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளனர். இதனால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எம்மை வெளியேற்றி அக்காணிகளை சோலார் திட்டத்திற்காக வழங்க உள்ளனர்.இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் முறையிட்டும் எவ்வித ஆக்கபூர்வமான பதில்களும் எமக்கு வழங்கப்படவில்லை. அத்துடன் இன்றைய தினம் இடம்பெறுகின்ற நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனவும், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உத்தியோகபூர்வமான முறையில் குறித்த காணிகள் கையளிக்கப்பட்ட பின்னர் அவற்றை மக்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் இன்றைய தினம் எம்முடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதி ஒருவர் கலந்துரையாடியிருந்தார். அதன் அடிப்படையில் இன்று நாம் எதிர்ப்பு நடவடிக்கை எவற்றையும் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களிடம் தொலைபேசியில் வினவியபோது, நீதிமன்ற நடவடிக்கைக்கு நாம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் இன்றைய தினம் குறித்த காணிகள் அளக்கப்பட்டு இலங்கைத் துறைமுக அதிகாரசபையிடம் கையளிக்கப்படுமேயன்றி இன்று சோலார் நிறுவனத்திற்கு கையளிக்கப்படமாட்டாது எனவும் அவர்கள் அப்பகுதிக்கு செல்லமாட்டார்கள். அத்துடன் அவர்களுக்கு இந்த காணிகளை வழங்குவதா அல்லது இதற்கு பதிலாக வேறு காணிகளை வழங்குவதா என்பது தொடர்பில் பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.