வெலிகம பகுதியில் பரிதாபமான கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் பரணக்கடே பகுதியில் நேற்று (17) இரவு 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் தெரிவித்ததாவது, உயிரிழந்த இளைஞன் தனது தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். குடும்பத்தினருக்கிடையில் ஏற்பட்ட தகராறு இந்த கொலைக்குக் காரணமாகியுள்ளதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இளைஞனுக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மேலதிக விசாரணைக்காக பொலிஸார் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாமா-மருமகன் மோதலில் 22 வயது இளைஞன் பலி வெலிகம பகுதியில் பரிதாபமான கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாத்தறை மாவட்டத்தின் பரணக்கடே பகுதியில் நேற்று (17) இரவு 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.பொலிஸார் தெரிவித்ததாவது, உயிரிழந்த இளைஞன் தனது தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். குடும்பத்தினருக்கிடையில் ஏற்பட்ட தகராறு இந்த கொலைக்குக் காரணமாகியுள்ளதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.குறிப்பாக, இளைஞனுக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மேலதிக விசாரணைக்காக பொலிஸார் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.