• Aug 26 2025

யாழில் 108 சோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்; தாலி, சீதனம் வழங்கி வைப்பு - புலம்பெயர்ந்தவரின் நிதியில் ஏற்பாடு!

shanuja / Aug 25th 2025, 8:15 pm
image

யாழ். மாவட்டத்தில் 108 சோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து  தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், 


திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலை காரணமாக இல்லற வாழ்வில் இணைய முடியாமல் இருந்தவர்களை இனங்கண்டு அதில் 108 சோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது.  


சிங்கப்பூர் வாழ் தமிழ் உணர்வாளரது நிதிப் பங்களிப்பில் 108 சோடிகளுக்கும் திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது. 

 

தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் எதிர்வரும் செவ்வாழ்க் கிழமையன்று  குறித்த 108 தம்பதியினருக்கும் திருமணம் நிகழவுள்ளது.


திருமணத்திற்கு தேவையான  தாலி, சீதனம் உள்ளிட்ட அனைத்தும் குறித்த தம்பதியினருக்கு வழங்கப்படவுள்ளது.- என்று தெரிவித்தார்.

யாழில் 108 சோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்; தாலி, சீதனம் வழங்கி வைப்பு - புலம்பெயர்ந்தவரின் நிதியில் ஏற்பாடு யாழ். மாவட்டத்தில் 108 சோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து  தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலை காரணமாக இல்லற வாழ்வில் இணைய முடியாமல் இருந்தவர்களை இனங்கண்டு அதில் 108 சோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது.  சிங்கப்பூர் வாழ் தமிழ் உணர்வாளரது நிதிப் பங்களிப்பில் 108 சோடிகளுக்கும் திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது.  தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் எதிர்வரும் செவ்வாழ்க் கிழமையன்று  குறித்த 108 தம்பதியினருக்கும் திருமணம் நிகழவுள்ளது.திருமணத்திற்கு தேவையான  தாலி, சீதனம் உள்ளிட்ட அனைத்தும் குறித்த தம்பதியினருக்கு வழங்கப்படவுள்ளது.- என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement