• Jun 09 2025

நாட்டின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு! - வெளியான அறிவிப்பு

Chithra / Jun 9th 2025, 12:33 pm
image

 

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் புதன்கிழமை பத்து மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைப் பகுதிகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு புதன்கிழமை காலை 08:30 மணி முதல் மாலை 06:30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சூரிய மின்சக்தி மின் கட்டமைப்பை பிரதான மின் கட்டமைப்புடன் இணைப்பு, அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை குறிப்பிட்டுள்ளது.


நாட்டின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு - வெளியான அறிவிப்பு  கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் புதன்கிழமை பத்து மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைப் பகுதிகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு புதன்கிழமை காலை 08:30 மணி முதல் மாலை 06:30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சூரிய மின்சக்தி மின் கட்டமைப்பை பிரதான மின் கட்டமைப்புடன் இணைப்பு, அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement