• May 31 2025

அம்பாறையில் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு..!

Sharmi / May 30th 2025, 9:28 am
image

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் கடந்த  புதன்கிழமை(28) முதல் ஆரம்பமாகியது.

இதற்கமைய நிந்தவூர், காரைதீவு, நீலாவனை, நாவிதண்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி திட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினறுமான அபூபக்கர் ஆதம்பாவாவினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஐரங்கனி,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர்கள் மற்றும் அதிகாரிகள்,அப் பிரதேச செயலாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்,பிரதி அமைச்சின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேதமடைந்த வீடுகளைத் திருத்திக் கொள்ளவும்  புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்குமான ஆரம்ப கட்ட காசோலை வழங்கி வைக்கின்ற நிகழ்வு அம்பாறை பிரதேச செயலகத்தில் கடந்த  திங்கட்கிழமை(26)  நடைபெற்று இருந்தது.

இதன் போது  அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஐரங்கனியின் தலைமையில்  கிராமிய உட் கட்டமைப்பு சமூகப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம உட்பட திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் மஞ்சு ரத்நாயக்க   உட்பட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



அம்பாறையில் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு. தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் கடந்த  புதன்கிழமை(28) முதல் ஆரம்பமாகியது.இதற்கமைய நிந்தவூர், காரைதீவு, நீலாவனை, நாவிதண்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி திட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினறுமான அபூபக்கர் ஆதம்பாவாவினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஐரங்கனி,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர்கள் மற்றும் அதிகாரிகள்,அப் பிரதேச செயலாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்,பிரதி அமைச்சின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.மேலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேதமடைந்த வீடுகளைத் திருத்திக் கொள்ளவும்  புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்குமான ஆரம்ப கட்ட காசோலை வழங்கி வைக்கின்ற நிகழ்வு அம்பாறை பிரதேச செயலகத்தில் கடந்த  திங்கட்கிழமை(26)  நடைபெற்று இருந்தது.இதன் போது  அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஐரங்கனியின் தலைமையில்  கிராமிய உட் கட்டமைப்பு சமூகப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம உட்பட திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் மஞ்சு ரத்நாயக்க   உட்பட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement