ஈரான் போரைத் தொடங்க விரும்பவில்லை என்றும், ஆனால் தங்கள் நாட்டின் மீது எந்தவொரு ஆக்கிரமிப்பும் நடத்தப்பட்டால் அதற்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார்.
கராஜில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்டங்களின் தொடக்க நிகழ்வில் பேசிய பெசெஷ்கியான், ஈரான் போரைத் தொடங்காது என்றும், போரை வரவேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், எந்தவொரு ஆக்கிரமிப்பாளருக்கும் எதிராகவும் ஈரான் தனது முழு வலிமையுடன் நிற்கும் என அவர் கூறினார்.
“எந்த சக்தியாலும் உறுதியுடனும் மனவலிமையுடனும் நிற்கும் ஒரு நாட்டை சரணடையச் செய்ய முடியாது” என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அச்சுறுத்தல்களுக்கு ஈரான் தலைகுனியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதேவேளை, இராஜதந்திர முயற்சிகளும் தொடர்கின்றன. சமீபத்தில் கத்தார் பிரதமர் தெஹ்ரானுக்குச் சென்று ஈரான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் வழக்கமான கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மற்றும் கடற்படை முற்றுகையால் ஈரானின் வெளிநாட்டு வர்த்தகம் சுமார் 35 சதவீதம் குறைந்துள்ளதாக பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
எந்த சக்திக்கும் தலைகுனிய மாட்டோம்- போருக்கு மத்தியில் ஈரான் அதிபரின் அதிரடி ஈரான் போரைத் தொடங்க விரும்பவில்லை என்றும், ஆனால் தங்கள் நாட்டின் மீது எந்தவொரு ஆக்கிரமிப்பும் நடத்தப்பட்டால் அதற்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார்.கராஜில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்டங்களின் தொடக்க நிகழ்வில் பேசிய பெசெஷ்கியான், ஈரான் போரைத் தொடங்காது என்றும், போரை வரவேற்கவில்லை என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், எந்தவொரு ஆக்கிரமிப்பாளருக்கும் எதிராகவும் ஈரான் தனது முழு வலிமையுடன் நிற்கும் என அவர் கூறினார்.“எந்த சக்தியாலும் உறுதியுடனும் மனவலிமையுடனும் நிற்கும் ஒரு நாட்டை சரணடையச் செய்ய முடியாது” என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தினார். இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அச்சுறுத்தல்களுக்கு ஈரான் தலைகுனியாது என்றும் அவர் தெரிவித்தார்.ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதேவேளை, இராஜதந்திர முயற்சிகளும் தொடர்கின்றன. சமீபத்தில் கத்தார் பிரதமர் தெஹ்ரானுக்குச் சென்று ஈரான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் வழக்கமான கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதனிடையே, அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மற்றும் கடற்படை முற்றுகையால் ஈரானின் வெளிநாட்டு வர்த்தகம் சுமார் 35 சதவீதம் குறைந்துள்ளதாக பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.