• Jul 08 2025

கம்பஹாவில் இன்று நீர் விநியோகம் தடை!

shanuja / Jul 7th 2025, 8:35 am
image

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று (07) 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தால் விநியோகிக்கப்படும் குழாய்களில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 


அதன்படி, இன்று (07) காலை 8:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்ட  பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அந்த சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. 


  

பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க / சீதுவை நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளிலேயே இன்று நீர் விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் இன்று நீர் விநியோகம் தடை கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று (07) 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தால் விநியோகிக்கப்படும் குழாய்களில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இன்று (07) காலை 8:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்ட  பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அந்த சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.   பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க / சீதுவை நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளிலேயே இன்று நீர் விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement