வவுனியா பல்கலைக்கழகத்தின் வருடாந்த கல்வியியல் ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது என்று வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ. அற்புதராஜா தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
ஆராய்ச்சி மாநாடு 'புதிய வணிக நோக்கங்கள்: எதிர்காலத்துக்கான புதிய பாதை அமைத்தல்' என்ற தொனிப் பொருளில் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாடு உலக வணிக நிலையின் புதிய மாற்றம் வளர்ந்து வரும் அறிவு மற்றும் போக்குகளை பரிமாறிக் கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
குறித்த மாநாட்டிற்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆராய்ச்சியாளர்கள், கல்வியலாளர்கள் மற்றும் தொழில்சார் வல்லுநர்களிடம் கோரப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி மாநாட்டில் பல ஆய்வாளர்களும் வெளிநாட்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.- என்றார்.
வவுனியா பல்கலையின் 6ஆவது கல்வியியல் மாநாடு ஓகஸ்ட் 18 இல் வவுனியா பல்கலைக்கழகத்தின் வருடாந்த கல்வியியல் ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது என்று வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ. அற்புதராஜா தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ஆராய்ச்சி மாநாடு 'புதிய வணிக நோக்கங்கள்: எதிர்காலத்துக்கான புதிய பாதை அமைத்தல்' என்ற தொனிப் பொருளில் இடம்பெறவுள்ளது.இந்த மாநாடு உலக வணிக நிலையின் புதிய மாற்றம் வளர்ந்து வரும் அறிவு மற்றும் போக்குகளை பரிமாறிக் கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும்.குறித்த மாநாட்டிற்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆராய்ச்சியாளர்கள், கல்வியலாளர்கள் மற்றும் தொழில்சார் வல்லுநர்களிடம் கோரப்பட்டுள்ளது.வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி மாநாட்டில் பல ஆய்வாளர்களும் வெளிநாட்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.- என்றார்.