ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீரகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இறுதிச் சடங்கு ஒன்றின் ஏற்பாடுகள் தொடர்பாக விகாரை வளாகத்துக்குள் நடைபெற்ற கூட்டமொன்றின்போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக வீரகுல பொலிஸார் பல விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகுல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சீலரத்ன தேரர் மீது அடையாளம் தெரியாத நபர் தாக்குதல் விகாரை வளாகத்தில் பரபரப்பு ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீரகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்போது அவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இறுதிச் சடங்கு ஒன்றின் ஏற்பாடுகள் தொடர்பாக விகாரை வளாகத்துக்குள் நடைபெற்ற கூட்டமொன்றின்போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.சந்தேகநபரை கைது செய்வதற்காக வீரகுல பொலிஸார் பல விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகுல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.