ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிக்கையில், மனித உரிமைகள் தொடர்பான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.
தொடர்ச்சியான ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்தினேன்.
புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து நல்லிணக்க முயற்சிகள் மற்றும் மனித உரிமைகள் மீதான முன்னேற்றம் குறித்தும் அவருக்கு விளக்கினேன்.
ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், நேற்று முதல் 26 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.
ஐ.நா. உயர் ஆணையாளர் - வெளியுறவு அமைச்சர் இடையே சந்திப்பு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளார். இது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிக்கையில், மனித உரிமைகள் தொடர்பான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. தொடர்ச்சியான ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்தினேன். புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து நல்லிணக்க முயற்சிகள் மற்றும் மனித உரிமைகள் மீதான முன்னேற்றம் குறித்தும் அவருக்கு விளக்கினேன்.ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், நேற்று முதல் 26 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.