• Jun 25 2025

குருந்தூர்மலையில் கைதான இரு விவசாயிகள் மீண்டும் விளக்கமறியலில்!

Chithra / May 29th 2025, 3:47 pm
image


குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7 ஆம் திகதி வரை மீண்டும்  விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

குமுழமுனை - தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் குறித்த காணியின் உரிமையாளர் சசிகுமார் என்பவர் தனது பணியாட்கள் மூலம் உழவியந்திரத்தின் மூலம் மே மாதம் 10 திகதி  குருந்தூர் மலை பகுதியில் இரு விவசாயிகளால் உழவு செய்து கொண்டிருந்தபோது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, புத்த துறவி கல்கமுவ சாந்தபோதி தேரர் தொல்பொருள் திணைக்களத்துக்கு  அளித்த புகாரைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் மே மாதம்  15 வரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டனர். 

தொடர்ந்து மே 29 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில்  வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு  மீண்டும் ஜூன் 5 ஆம் திகதிவரை  விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்கள்.


குருந்தூர்மலையில் கைதான இரு விவசாயிகள் மீண்டும் விளக்கமறியலில் குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7 ஆம் திகதி வரை மீண்டும்  விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.குமுழமுனை - தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் குறித்த காணியின் உரிமையாளர் சசிகுமார் என்பவர் தனது பணியாட்கள் மூலம் உழவியந்திரத்தின் மூலம் மே மாதம் 10 திகதி  குருந்தூர் மலை பகுதியில் இரு விவசாயிகளால் உழவு செய்து கொண்டிருந்தபோது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, புத்த துறவி கல்கமுவ சாந்தபோதி தேரர் தொல்பொருள் திணைக்களத்துக்கு  அளித்த புகாரைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தனர்.கைதுசெய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் மே மாதம்  15 வரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டனர். தொடர்ந்து மே 29 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில்  வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு  மீண்டும் ஜூன் 5 ஆம் திகதிவரை  விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now