• Sep 14 2025

மணற்கடத்தைலை தடுக்க முயற்சித்தவர்களுக்கு அச்சுறுத்தல்; வாடிகளுக்கு தீ வைத்து அராஜகம்- கற்கோவளத்தில் பதற்றம்!

shanuja / Sep 13th 2025, 12:12 pm
image

சட்டவிரோத மணற்கடத்தலை தடுக்க முயற்சித்த காரணத்தினால்  கற்கோவளத்தில் மீனவ வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. 


மணற்கடத்தல் காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட வெறியாட்டத்தில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் ஒரு மீனவர் காயமடைந்துள்ளார். நேற்று (12) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான வ.வசந்தகுமார் (வயது-30) என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை கடற்றொழில் மறிப்பு போராட்டத்தை குறித்த பகுதி மீனவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சட்டவிரோத மணற்கடத்தல் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும்   போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 


சம்பவம் தொடர்பில் கற்கோவளம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் சிவகுரு இராமஜெயம் கருத்து தெரிவிக்கையில், 

video


இதேவேளை சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திரிலிங்கநாதன் சென்று பார்வையிட்டு பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 


இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மணற்கடத்தைலை தடுக்க முயற்சித்தவர்களுக்கு அச்சுறுத்தல்; வாடிகளுக்கு தீ வைத்து அராஜகம்- கற்கோவளத்தில் பதற்றம் சட்டவிரோத மணற்கடத்தலை தடுக்க முயற்சித்த காரணத்தினால்  கற்கோவளத்தில் மீனவ வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. மணற்கடத்தல் காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட வெறியாட்டத்தில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு மீனவர் காயமடைந்துள்ளார். நேற்று (12) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான வ.வசந்தகுமார் (வயது-30) என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை கடற்றொழில் மறிப்பு போராட்டத்தை குறித்த பகுதி மீனவர்கள் முன்னெடுத்திருந்தனர்.இச்சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சட்டவிரோத மணற்கடத்தல் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும்   போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் கற்கோவளம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் சிவகுரு இராமஜெயம் கருத்து தெரிவிக்கையில், videoஇதேவேளை சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திரிலிங்கநாதன் சென்று பார்வையிட்டு பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement