கொழும்பு - கண்டி வீதியில் பட்டிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் பயணித்த நபரை அடித்துத் தள்ளிய லொறி - நபர் உயிரிழப்பு கொழும்பு - கண்டி வீதியில் பட்டிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்துச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பேலியகொடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.