• Jun 29 2025

தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் சட்டம் - உயர்ஸ்தானிகரின் கருத்தை மறுத்த நீதி அமைச்சர்

Chithra / Jun 29th 2025, 2:31 pm
image

 

தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்தை, நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தின் போது ஊடக சந்திப்பில் பேசிய உயர்ஸ்தானிகர்,

தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் ஒரு யோசனை தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ளது என்றும், அதைப் பரிசீலிக்கும் நிலையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

தாம் அதனை வரவேற்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

உயர்ஸ்தானிகர் குறிப்பிட்ட யோசனை நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அதுபற்றி எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் சட்டம் - உயர்ஸ்தானிகரின் கருத்தை மறுத்த நீதி அமைச்சர்  தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்தை, நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார்.இலங்கைக்கான விஜயத்தின் போது ஊடக சந்திப்பில் பேசிய உயர்ஸ்தானிகர்,தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் ஒரு யோசனை தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ளது என்றும், அதைப் பரிசீலிக்கும் நிலையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.தாம் அதனை வரவேற்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.உயர்ஸ்தானிகர் குறிப்பிட்ட யோசனை நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அதுபற்றி எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement