சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட புனரமைக்கப்பட்டு வரும் மீசாலை - அல்லாரை வீதியின் பணிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்களையடுத்து வீதியின் புனரமைப்புப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைக்கப்பட்டு வரும் மீசாலை - அல்லாரை வீதியின் புனரமைப்பின் தரம் தொடர்பிலும் புனரமைப்பின் போது பின்பற்றப்படுகின்ற நடைமுறை தொடர்பிலும் பொதுமக்களால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதனையடுத்து நேற்று குறித்த வீதிக்குச் சென்ற சாவகச்சேரி உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டதோடு பொதுமக்களோடும் கலந்துரையாடினர்.
ஆனால் இதனை மீறி புனரமைப்பு பணிகள் இன்று தொடரப்பட்டன. இந்த நிலையில் குறித்த வீதிக்குச் சென்ற உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரை தொடர்புகொண்டு வீதிப் புனரமைப்பின் குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டி மக்களை தெளிவுபடுத்தி கண்காணிப்பு குழு ஒன்றினை அமைக்குமாறும் அதுவரை புனரமைப்பு பணியை உடனடியாக நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.
அதனையடுத்து புனரமைப்புப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதோடு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
விமர்சனங்களுக்குள்ளான மீசாலை - அல்லாரை வீதி புனரமைப்பு நிறுத்தம். சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட புனரமைக்கப்பட்டு வரும் மீசாலை - அல்லாரை வீதியின் பணிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்களையடுத்து வீதியின் புனரமைப்புப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைக்கப்பட்டு வரும் மீசாலை - அல்லாரை வீதியின் புனரமைப்பின் தரம் தொடர்பிலும் புனரமைப்பின் போது பின்பற்றப்படுகின்ற நடைமுறை தொடர்பிலும் பொதுமக்களால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதனையடுத்து நேற்று குறித்த வீதிக்குச் சென்ற சாவகச்சேரி உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டதோடு பொதுமக்களோடும் கலந்துரையாடினர்.ஆனால் இதனை மீறி புனரமைப்பு பணிகள் இன்று தொடரப்பட்டன. இந்த நிலையில் குறித்த வீதிக்குச் சென்ற உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரை தொடர்புகொண்டு வீதிப் புனரமைப்பின் குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டி மக்களை தெளிவுபடுத்தி கண்காணிப்பு குழு ஒன்றினை அமைக்குமாறும் அதுவரை புனரமைப்பு பணியை உடனடியாக நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். அதனையடுத்து புனரமைப்புப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதோடு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.