• Jan 13 2026

அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் - அன்னராசா காட்டம்!

shanuja / Jan 12th 2026, 4:26 pm
image

வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.


இன்றையதினம் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் புதுச்சேரி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதேவேளை நெடுந்தீவு மற்றும் அனலைதீவு கடற்பரப்பிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்றன.


இவ்வாறு அவர்கள் இலங்கை கடற்பரப்பினை அழித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மீனவர்களின் பிரச்சினையை தீர்க்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் பாரத பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். பாரத பிரதமருக்கு கடிதத்தினை எழுதி தொடர்ந்து அரசியல் நாடகத்தினை செய்யாதீர்கள்.


தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் முதலாளி வர்க்கத்தினரிடம் தான் இந்த இழுவைமடித் தொழில்கள் இருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் தான் எமது கடல் வளத்தை அழிக்கின்றனர். முதலமைச்சர் நினைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து இழுவைமடித் தொழில்களையும் நிறுத்தலாம்.


நீங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினாலேயே எமது மனம் வேதனை அடைகிறது. தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இருக்கின்ற தன்னுடைய மீனவர்களை, நான்கு வருடங்களாக பதவியில் இருக்கின்ற முதலமைச்சர் கட்டுப்படுத்தாமல் அந்த பிரச்சினையை அரசியலாக்குவது நல்லதல்ல. அவர்களுடைய மீனவர்கள் எங்களுடைய எல்லைக்குள் வராமல் கட்டுப்படுத்துவதே நல்ல விடயம்.


அதேபோல இலங்கையில் மலையகத்தில் எமது சொந்தங்கள் 200 வருடங்களுக்கு மேலாக பல இன்னல்களை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய நெருக்கடியை தீர்ப்பதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.


வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடிக்கு  கடிதங்களை எழுதி அரசியல் செய்யாதீர்கள். வடக்கு மக்களையும், மலையக மக்களையும் புறந்தள்ளி அரசியலை முன்னே கொண்டு செல்வதை தமிழக முதலமைச்சர் நிறுத்த வேண்டும்.


முதலமைச்சரே நீங்கள் நினைத்தால் இந்த சட்டவிரோத தொழிலுக்கும், இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கும் நாளையே தீர்வினை வழங்க முடியும். வடக்கு தமிழ் மீனவர்களின் ஆதங்கமும், கடல் வலிகளும் உங்களையே சாரும் என்றார்.

அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் - அன்னராசா காட்டம் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.இன்றையதினம் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் புதுச்சேரி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதேவேளை நெடுந்தீவு மற்றும் அனலைதீவு கடற்பரப்பிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்றன.இவ்வாறு அவர்கள் இலங்கை கடற்பரப்பினை அழித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மீனவர்களின் பிரச்சினையை தீர்க்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் பாரத பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். பாரத பிரதமருக்கு கடிதத்தினை எழுதி தொடர்ந்து அரசியல் நாடகத்தினை செய்யாதீர்கள்.தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் முதலாளி வர்க்கத்தினரிடம் தான் இந்த இழுவைமடித் தொழில்கள் இருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் தான் எமது கடல் வளத்தை அழிக்கின்றனர். முதலமைச்சர் நினைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து இழுவைமடித் தொழில்களையும் நிறுத்தலாம்.நீங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினாலேயே எமது மனம் வேதனை அடைகிறது. தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இருக்கின்ற தன்னுடைய மீனவர்களை, நான்கு வருடங்களாக பதவியில் இருக்கின்ற முதலமைச்சர் கட்டுப்படுத்தாமல் அந்த பிரச்சினையை அரசியலாக்குவது நல்லதல்ல. அவர்களுடைய மீனவர்கள் எங்களுடைய எல்லைக்குள் வராமல் கட்டுப்படுத்துவதே நல்ல விடயம்.அதேபோல இலங்கையில் மலையகத்தில் எமது சொந்தங்கள் 200 வருடங்களுக்கு மேலாக பல இன்னல்களை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய நெருக்கடியை தீர்ப்பதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடிக்கு  கடிதங்களை எழுதி அரசியல் செய்யாதீர்கள். வடக்கு மக்களையும், மலையக மக்களையும் புறந்தள்ளி அரசியலை முன்னே கொண்டு செல்வதை தமிழக முதலமைச்சர் நிறுத்த வேண்டும்.முதலமைச்சரே நீங்கள் நினைத்தால் இந்த சட்டவிரோத தொழிலுக்கும், இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கும் நாளையே தீர்வினை வழங்க முடியும். வடக்கு தமிழ் மீனவர்களின் ஆதங்கமும், கடல் வலிகளும் உங்களையே சாரும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement