• Jun 24 2025

மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து

Chithra / Jun 23rd 2025, 1:48 pm
image

 

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா  பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து இன்று காலை நானுஓயா ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. 

நானுஓயா பிரதான நகரில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போதே  விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும்,  இரண்டு பாடசாலை மாணவர்களும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 

அதிவேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என  நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். 

முச்சக்கர வண்டி  கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நுவரெலியா பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதிகளில் வாகனம் செலுத்துவோர் கவனமாக இருக்குமாறு நானுஓயா பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொள்கின்றனர்.


மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து  நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா  பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று காலை நானுஓயா ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நானுஓயா பிரதான நகரில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போதே  விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும்,  இரண்டு பாடசாலை மாணவர்களும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அதிவேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என  நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டி  கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை நுவரெலியா பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதிகளில் வாகனம் செலுத்துவோர் கவனமாக இருக்குமாறு நானுஓயா பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement