• Jun 10 2025

நல்லூர் பிரதேச சபையின் அலட்சியப் போக்கு; யாழில் மக்கள் ஒன்றுகூடி போராட்டம்

Chithra / Jun 9th 2025, 12:12 pm
image


'இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்' என்ற தொனிப்பொருளில் காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக கண்டனப் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.  

இப்போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில்  யாழ்.மாவட்டச் செயலக முன்றலில்  இடம்பெற்றது.

சமூக செயற்பாட்டர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் அரசியல் கட்சியினர், சிவில் சமூக அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களால் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டவையாவது, 

இணுவில் காரைக்கால் சிவன்கோவிலினை ஒரு எல்லையாகவும் காரைக்கால் இந்து மயானத்தினை ஒரு எல்லையாகவும் கொண்டு நல்லூர் பிரதேச சபையால் முறையற்ற விதத்தில் உரிய நியமங்களை பின்பற்றாமல் நல்லூர் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கும் இரசாயன, மருத்துவ, இலத்திரனியல், பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை சேகரித்து மயான காணியின் ஒரு பகுதியில் எல்லைச்சுவரினை எழுப்பி விட்டு திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது. அது தற்போது கழிவு மலையாக காட்சியளிக்கின்றது.

உண்மையில் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து உரிய நியமங்களை பின்பற்றி சூழலுக்கு மாசடையாத விதத்தில் திண்மக் கழிவகற்றல் இடம்பெற வேண்டும். ஆனால் இங்கு சுகாதார வைத்திய அதிகார பணிமனை ஆலோசனை வழிகாட்டலோ மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியோ பெறாமல் தான்தோன்றித் தனமாக நல்லூர் பிரதேச சபை செயற்பட்டு எமது நிலத்தை, நிலத்தடி நீரினை, காற்றினை மாசடைய செய்து மக்களை இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


இந்நிலையில் திண்மக் கழிவுகள் இயல்பாகவே பிரிகை அடைவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது அதே வேளை மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய திண்மக் கழிவுகளை தீயிட்டு கொளுத்தியதால் காற்று மாசடைந்து வீட்டில் இருக்க முடியாமல் பிரதேசத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தாப்பட்டது.


எமது கோரிக்கை 


1. இந்த சட்டவிரோத திண்மக் கழிவகற்றல் நிறுத்தப்பட வேண்டும்

2. உரிய நியமங்களை பின்பற்றி குப்பைகள் அந்த வளாகத்தில் இருந்து அகற்றப் பட வேண்டும்.

3. அரியாலையில் நல்லூர் பிரதேச சபைக்கு என திண்மக் கழிவு அகற்றலுக்கு ஒதுக்கப்பட்ட காணியில் உரிய அனுமதிகளை பெற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இயங்குவதற்கு ஆவண செய்யப்படல் வேண்டும்

4. பிரசித்தி பெற்ற காரைக்கால் சிவன் கோவிலை நாம் வழிபாடு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்படுத்த பட வேண்டும்.

5. எமது இறுதி வழிபாடு செய்யும் காரைக்கால் இந்து மயானத்தினை மக்கள் பாவனைக்காக முழுமையாக ஒப்படைக்க வேண்டும். உடனடியாக குறிப்பிட காலத்துக்குள் சீர் செய்யப்படா விடின் போராட்டங்கள் தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். என குறிப்பிடப்பட்டுள்ளது. 


நல்லூர் பிரதேச சபையின் அலட்சியப் போக்கு; யாழில் மக்கள் ஒன்றுகூடி போராட்டம் 'இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்' என்ற தொனிப்பொருளில் காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக கண்டனப் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.  இப்போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில்  யாழ்.மாவட்டச் செயலக முன்றலில்  இடம்பெற்றது.சமூக செயற்பாட்டர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் அரசியல் கட்சியினர், சிவில் சமூக அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.இந்நிலையில் போராட்டக்காரர்களால் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டவையாவது, இணுவில் காரைக்கால் சிவன்கோவிலினை ஒரு எல்லையாகவும் காரைக்கால் இந்து மயானத்தினை ஒரு எல்லையாகவும் கொண்டு நல்லூர் பிரதேச சபையால் முறையற்ற விதத்தில் உரிய நியமங்களை பின்பற்றாமல் நல்லூர் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கும் இரசாயன, மருத்துவ, இலத்திரனியல், பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை சேகரித்து மயான காணியின் ஒரு பகுதியில் எல்லைச்சுவரினை எழுப்பி விட்டு திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது. அது தற்போது கழிவு மலையாக காட்சியளிக்கின்றது.உண்மையில் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து உரிய நியமங்களை பின்பற்றி சூழலுக்கு மாசடையாத விதத்தில் திண்மக் கழிவகற்றல் இடம்பெற வேண்டும். ஆனால் இங்கு சுகாதார வைத்திய அதிகார பணிமனை ஆலோசனை வழிகாட்டலோ மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியோ பெறாமல் தான்தோன்றித் தனமாக நல்லூர் பிரதேச சபை செயற்பட்டு எமது நிலத்தை, நிலத்தடி நீரினை, காற்றினை மாசடைய செய்து மக்களை இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.இந்நிலையில் திண்மக் கழிவுகள் இயல்பாகவே பிரிகை அடைவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது அதே வேளை மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய திண்மக் கழிவுகளை தீயிட்டு கொளுத்தியதால் காற்று மாசடைந்து வீட்டில் இருக்க முடியாமல் பிரதேசத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தாப்பட்டது.எமது கோரிக்கை 1. இந்த சட்டவிரோத திண்மக் கழிவகற்றல் நிறுத்தப்பட வேண்டும்2. உரிய நியமங்களை பின்பற்றி குப்பைகள் அந்த வளாகத்தில் இருந்து அகற்றப் பட வேண்டும்.3. அரியாலையில் நல்லூர் பிரதேச சபைக்கு என திண்மக் கழிவு அகற்றலுக்கு ஒதுக்கப்பட்ட காணியில் உரிய அனுமதிகளை பெற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இயங்குவதற்கு ஆவண செய்யப்படல் வேண்டும்4. பிரசித்தி பெற்ற காரைக்கால் சிவன் கோவிலை நாம் வழிபாடு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்படுத்த பட வேண்டும்.5. எமது இறுதி வழிபாடு செய்யும் காரைக்கால் இந்து மயானத்தினை மக்கள் பாவனைக்காக முழுமையாக ஒப்படைக்க வேண்டும். உடனடியாக குறிப்பிட காலத்துக்குள் சீர் செய்யப்படா விடின் போராட்டங்கள் தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement