• Jun 28 2025

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள்; அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

Chithra / Jun 27th 2025, 10:25 am
image


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தப் பிரிவால் நடத்தப்படும் வெளிவாரி பட்டப்படிப்பு கருத்தரங்குகள் மற்றும் பதிவு நடவடிக்கைகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

இது குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக்கழக விரிவுரையாளரான தம்பர அமில தேரர், 

தற்போதைய பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்து கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

எனினும், வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க, அரசாங்கமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஞவும் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

பொது நிறுவனங்கள் குழு (COPE) சமீபத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பாடநெறி ஆய்வுத் துறையில் நிதி முறைகேடுகள் இருப்பதை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள்; அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரிவால் நடத்தப்படும் வெளிவாரி பட்டப்படிப்பு கருத்தரங்குகள் மற்றும் பதிவு நடவடிக்கைகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக்கழக விரிவுரையாளரான தம்பர அமில தேரர், தற்போதைய பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்து கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.எனினும், வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க, அரசாங்கமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஞவும் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பொது நிறுவனங்கள் குழு (COPE) சமீபத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பாடநெறி ஆய்வுத் துறையில் நிதி முறைகேடுகள் இருப்பதை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement