• Jun 15 2025

அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை:அரசாங்கம் அவசரமாக தலையிட வேண்டும்- சஜித் வலியுறுத்து..!

Sharmi / Jun 14th 2025, 5:17 pm
image

இலங்கையில் புற்றுநோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கான உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 180 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,

அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை தொடர்பில் அரசாங்கம் அவசரமாக தலையிட வேண்டும்.

முக்கியமான மருத்துவ பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லாததால் பொது சுகாதார அமைப்பு பெரும் சரிவை எதிர்கொள்கிறது.

இலவச சுகாதார சேவையை வழங்க வேண்டிய அரசு மருத்துவமனைகள் கூட மருந்துகளை வழங்க முடியாமல், நோயாளிகள் தனியார் நிறுவனங்களிலிருந்து அதிக விலையில் அவற்றை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்தப் பற்றாக்குறை உயிர்களை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், மக்களின் அடிப்படை மனித சுகாதார உரிமையை மீறும் அதே வேளையில் அரசாங்கம் அமைதியாகவும் செயலற்றதாகவும் இருப்பதாகவும்  சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, மனித உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்தி, அனைத்து பொறுப்புள்ள அதிகாரிகளும் தாமதமின்றி செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை:அரசாங்கம் அவசரமாக தலையிட வேண்டும்- சஜித் வலியுறுத்து. இலங்கையில் புற்றுநோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கான உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 180 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை தொடர்பில் அரசாங்கம் அவசரமாக தலையிட வேண்டும்.முக்கியமான மருத்துவ பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லாததால் பொது சுகாதார அமைப்பு பெரும் சரிவை எதிர்கொள்கிறது.இலவச சுகாதார சேவையை வழங்க வேண்டிய அரசு மருத்துவமனைகள் கூட மருந்துகளை வழங்க முடியாமல், நோயாளிகள் தனியார் நிறுவனங்களிலிருந்து அதிக விலையில் அவற்றை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இந்தப் பற்றாக்குறை உயிர்களை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், மக்களின் அடிப்படை மனித சுகாதார உரிமையை மீறும் அதே வேளையில் அரசாங்கம் அமைதியாகவும் செயலற்றதாகவும் இருப்பதாகவும்  சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, மனித உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்தி, அனைத்து பொறுப்புள்ள அதிகாரிகளும் தாமதமின்றி செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement