• Jun 09 2025

பஸ்ஸில் பெண்களிடம் பாலியல் சீண்டல்கள்; இளைஞர்களை கண்டித்த நடத்துநருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Chithra / Jun 9th 2025, 3:53 pm
image


கண்டி - நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்த பஸ் நடத்துநரை இளைஞர்கள் இருவர் பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்த இரு இளைஞர்கள் போதைப்பொருளை பாவித்கொண்டு பஸ்ஸில் இருந்த பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளனர். 

இதனை அவதானித்த பஸ் நடத்துநர், இரு இளைஞர்களையும் கண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இளைஞர்கள் இருவரும் பஸ் நடத்துநரை பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பஸ் நடத்துநர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்களும் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


பஸ்ஸில் பெண்களிடம் பாலியல் சீண்டல்கள்; இளைஞர்களை கண்டித்த நடத்துநருக்கு காத்திருந்த அதிர்ச்சி கண்டி - நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்த பஸ் நடத்துநரை இளைஞர்கள் இருவர் பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் தெரியவருவதாவது, நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்த இரு இளைஞர்கள் போதைப்பொருளை பாவித்கொண்டு பஸ்ஸில் இருந்த பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளனர். இதனை அவதானித்த பஸ் நடத்துநர், இரு இளைஞர்களையும் கண்டித்துள்ளார்.இதனால் கோபமடைந்த இளைஞர்கள் இருவரும் பஸ் நடத்துநரை பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.தாக்குதலில் காயமடைந்த பஸ் நடத்துநர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்களும் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement