மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன என்றும், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது என வெளியாகும் கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து, இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், அதற்கான பணம் ஏற்கனவே வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"தேர்தலுக்கான பணம் ஒருவேளை ஒதுக்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட, மக்கள் இறையாண்மையை மதித்துத் தேர்தலை நடத்துவதற்காகத் தேவை ஏற்படும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு ஒன்றின் மூலம் அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. எனவே பணம் ஒரு தடையல்ல." - என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது உள்ள முக்கிய தடை பணம் அல்ல என்றும், அது தொடர்பான தேர்தல் சட்ட விதிகளில் உள்ள முரண்பாடுகளும் சிக்கல்களுமே காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார்.
"இந்தச் சட்டச் சிக்கல்களுக்குத் தகுந்த தீர்வு காண்பதற்காகத் தற்போது விசேட நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டுச் செயற்பட்டு வருகின்றது. இது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றக் குழுவின் மூலம் தேவையான சட்டக் கட்டமைப்பு சீர்செய்யப்பட்டுத் தயாரிக்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்." - என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
தற்போதைய அரசு தேர்தல்களைக் கண்டு அஞ்சுவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், மக்களின் தேர்தல் உரிமைகளை அரசு எப்போதும் பாதுகாக்கும் என்றும் கூறினார்.
"இந்த அரசு ஆட்சிக்கு வந்த கடந்த எட்டு மாதங்களுக்குள் ஏற்கனவே இரண்டு பிரதான தேர்தல்களை (ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள்) வெற்றிகரமாக நடத்தியுள்ளது. எனவே, அரசமைப்புக்கு அமைவாக மக்களின் இறையாண்மையைப் பாதுகாத்து, மாகாண சபைத் தேர்தலையும் உரிய முறையில் நடத்துவதே எமது இறுதி எதிர்பார்ப்பாகும்." - என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னைய ஆட்சிக் காலங்களில் மாகாண சபைத் தேர்தல் சட்டம் குழப்பப்பட்டமையே தற்போதைய இழுபறிக்குக் காரணம் என்றும், அதனைச் சட்டப்பூர்வமாக நிவர்த்தி செய்த பின்பே தேர்தலை நடத்த முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டினார்
நிதிப் பற்றாக்குறையால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படாது - சட்டச் சிக்கல்களே தடை நளிந்த விளக்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன என்றும், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது என வெளியாகும் கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து, இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், அதற்கான பணம் ஏற்கனவே வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்."தேர்தலுக்கான பணம் ஒருவேளை ஒதுக்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட, மக்கள் இறையாண்மையை மதித்துத் தேர்தலை நடத்துவதற்காகத் தேவை ஏற்படும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு ஒன்றின் மூலம் அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. எனவே பணம் ஒரு தடையல்ல." - என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது உள்ள முக்கிய தடை பணம் அல்ல என்றும், அது தொடர்பான தேர்தல் சட்ட விதிகளில் உள்ள முரண்பாடுகளும் சிக்கல்களுமே காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார்."இந்தச் சட்டச் சிக்கல்களுக்குத் தகுந்த தீர்வு காண்பதற்காகத் தற்போது விசேட நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டுச் செயற்பட்டு வருகின்றது. இது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.நாடாளுமன்றக் குழுவின் மூலம் தேவையான சட்டக் கட்டமைப்பு சீர்செய்யப்பட்டுத் தயாரிக்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்." - என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.தற்போதைய அரசு தேர்தல்களைக் கண்டு அஞ்சுவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், மக்களின் தேர்தல் உரிமைகளை அரசு எப்போதும் பாதுகாக்கும் என்றும் கூறினார்."இந்த அரசு ஆட்சிக்கு வந்த கடந்த எட்டு மாதங்களுக்குள் ஏற்கனவே இரண்டு பிரதான தேர்தல்களை (ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள்) வெற்றிகரமாக நடத்தியுள்ளது. எனவே, அரசமைப்புக்கு அமைவாக மக்களின் இறையாண்மையைப் பாதுகாத்து, மாகாண சபைத் தேர்தலையும் உரிய முறையில் நடத்துவதே எமது இறுதி எதிர்பார்ப்பாகும்." - என்றும் அவர் தெரிவித்தார்.முன்னைய ஆட்சிக் காலங்களில் மாகாண சபைத் தேர்தல் சட்டம் குழப்பப்பட்டமையே தற்போதைய இழுபறிக்குக் காரணம் என்றும், அதனைச் சட்டப்பூர்வமாக நிவர்த்தி செய்த பின்பே தேர்தலை நடத்த முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டினார்