• Mar 13 2026

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவர் பதவியேற்பு!

Ziya / Jan 19th 2026, 2:58 pm
image

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவர் எந்திரி எஸ்.விமலேஸ்வரன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


இன்று காலை கிளிநொச்சி நகரில் உள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகத்திற்கு வருகை தந்த புதிய தலைவரை உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.


தொடர்ந்து கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,


அழகான நாடு வளமான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய எமது நாடு வளம்பெற்று வருகின்ற நிலையில் நிறைய பிரச்சனைக்கு மத்தியில் வடமாகாண போக்குவரத்து காணப்படுகின்றது. 


குறிப்பாக இணைந்த நேர அட்டவணை பிரச்சனை உள்ளடங்களாக பல பிரச்சனைகள் காணப்படுகின்றது. 


இவற்றை ஆராய்ந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஒற்றுமையோடு அனைவரும் சேர்ந்து வடமாகாண பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவர் பதவியேற்பு வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவர் எந்திரி எஸ்.விமலேஸ்வரன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.இன்று காலை கிளிநொச்சி நகரில் உள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகத்திற்கு வருகை தந்த புதிய தலைவரை உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.தொடர்ந்து கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,அழகான நாடு வளமான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய எமது நாடு வளம்பெற்று வருகின்ற நிலையில் நிறைய பிரச்சனைக்கு மத்தியில் வடமாகாண போக்குவரத்து காணப்படுகின்றது. குறிப்பாக இணைந்த நேர அட்டவணை பிரச்சனை உள்ளடங்களாக பல பிரச்சனைகள் காணப்படுகின்றது. இவற்றை ஆராய்ந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஒற்றுமையோடு அனைவரும் சேர்ந்து வடமாகாண பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement