• Jun 03 2025

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்! இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

Chithra / May 9th 2025, 11:49 am
image

 

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா பௌத்த நிலைய விகாரையில் நாளை(10) மாலை நடைபெறவுள்ளது.

நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில் நீண்ட வார விடுமுறை மற்றும் அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் பல விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில், கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இந்த விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

அதன்படி, இந்த சிறப்பு ரயில் சேவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம் இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்  நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா பௌத்த நிலைய விகாரையில் நாளை(10) மாலை நடைபெறவுள்ளது.நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.இந்நிலையில் நீண்ட வார விடுமுறை மற்றும் அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் பல விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில், கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இந்த விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.அதன்படி, இந்த சிறப்பு ரயில் சேவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now