வலப்பனை பிரதேசசபையின் ஆட்சியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
வலப்பனை பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் தெரிவு, வலப்பனை பிதேச சபை கேட்போர் கூடத்தில் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இன்று (30) நடைபெற்றது.
தலைவர் தெரிவில் தேசிய மக்கள் சக்தி சார்பாக நளின் தேசப்பிரிய, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக லக்ஷான் ரந்திக்க ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் தேசப்பிரிய, திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனையடுத்து ஐக்கிய மக்கள் முன்னணியை சேர்ந்த உறுப்பினர் சுனில் குமாரசிங்க சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து வலப்பனை பிரதேச சபையின் ஆட்சியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
வலப்பனை பிரதேசசபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி வலப்பனை பிரதேசசபையின் ஆட்சியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.வலப்பனை பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் தெரிவு, வலப்பனை பிதேச சபை கேட்போர் கூடத்தில் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இன்று (30) நடைபெற்றது.தலைவர் தெரிவில் தேசிய மக்கள் சக்தி சார்பாக நளின் தேசப்பிரிய, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக லக்ஷான் ரந்திக்க ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் தேசப்பிரிய, திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனையடுத்து ஐக்கிய மக்கள் முன்னணியை சேர்ந்த உறுப்பினர் சுனில் குமாரசிங்க சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து வலப்பனை பிரதேச சபையின் ஆட்சியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.