• Jun 01 2025

காலநிலைப் பாதிப்பையடுத்து மலையக ரயில் மீண்டும் சேவையில்..!

shanuja / May 31st 2025, 11:36 am
image

சீரற்ற காலநிலையால் கலபட மற்றும் வட்டவளை ரயில் பாதைக்கு இடையே மரங்கள் விழுந்ததால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் சேவைகள் இன்று (31) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


நேற்று இரவு 9.00 மணியளவில் ரயில் பாதையில் விழுந்த மரங்களை ரயில்வே ஊழியர்களால் அகற்ற முடிந்தது.  பின்னர் இன்று காலை முதல் ரயில் சேவையை மீண்டும்  ஆரம்பிக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


அதன்படி, இன்று காலை பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படவிருந்த மலையக மெனிக்கே மற்றும் போடி மெனிக்கே உள்ளிட்ட அனைத்து ரயில்களையும் வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலைப் பாதிப்பையடுத்து மலையக ரயில் மீண்டும் சேவையில். சீரற்ற காலநிலையால் கலபட மற்றும் வட்டவளை ரயில் பாதைக்கு இடையே மரங்கள் விழுந்ததால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் சேவைகள் இன்று (31) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.நேற்று இரவு 9.00 மணியளவில் ரயில் பாதையில் விழுந்த மரங்களை ரயில்வே ஊழியர்களால் அகற்ற முடிந்தது.  பின்னர் இன்று காலை முதல் ரயில் சேவையை மீண்டும்  ஆரம்பிக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று காலை பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படவிருந்த மலையக மெனிக்கே மற்றும் போடி மெனிக்கே உள்ளிட்ட அனைத்து ரயில்களையும் வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement