• Jun 21 2025

மயிலத்தமடு மேய்ச்சல்தரை ஆர்ப்பாட்டம் - சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து விடுவிப்பு!

shanuja / Jun 20th 2025, 11:45 pm
image

மட்டக்களப்பு -  மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கிலிருந்து சந்தேகநபர்கள் விடுவிக்கப்ட்டனர். அத்துடன் வழக்கும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.  


கடந்த 2023 ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது  மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


அதனையடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேகநபர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் வழக்கு தொடுக்கப்பட்டது. 


குறித்த வழக்கு மீதான விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதவான்  நீதிமன்ற நீதிபதி  மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில்  இன்று  எடுத்துக்கொள்ளப்பட்டது. 


குறித்த வழக்கு மீதான விசாரணையில் சாட்சியங்களிடம் வழக்கினை தொடர்ந்து கொண்டுசெல்வதற்கான மேலதிக ஆதாரங்கள் இல்லாததன் காரணமாக இலங்கை தண்டனை சட்டக்கோவை 186 ன் பிரகாரம் நீததானுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கினை முடிவுறுத்தியதுடன் குற்றச்சாட்டப்பட்ட 30 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்ய ஏறாவூர் சுற்றுலா நீதவான்  நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன்  உத்தரவிட்டார்.

மயிலத்தமடு மேய்ச்சல்தரை ஆர்ப்பாட்டம் - சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து விடுவிப்பு மட்டக்களப்பு -  மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கிலிருந்து சந்தேகநபர்கள் விடுவிக்கப்ட்டனர். அத்துடன் வழக்கும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.  கடந்த 2023 ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது  மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேகநபர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் வழக்கு தொடுக்கப்பட்டது. குறித்த வழக்கு மீதான விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதவான்  நீதிமன்ற நீதிபதி  மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில்  இன்று  எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு மீதான விசாரணையில் சாட்சியங்களிடம் வழக்கினை தொடர்ந்து கொண்டுசெல்வதற்கான மேலதிக ஆதாரங்கள் இல்லாததன் காரணமாக இலங்கை தண்டனை சட்டக்கோவை 186 ன் பிரகாரம் நீததானுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கினை முடிவுறுத்தியதுடன் குற்றச்சாட்டப்பட்ட 30 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்ய ஏறாவூர் சுற்றுலா நீதவான்  நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன்  உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement