• Sep 15 2025

மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம்

Aathira / Sep 14th 2025, 8:58 pm
image

மட்டக்களப்பு - புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து பணம், தங்க ஆபரணங்களை திருடிய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

குறித்த வீட்டில் உள் நுழைந்த திருடர்கள் அலுமாரியில் வைக்கப்பட்டு இருந்த 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம், சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான  33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர். 

சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (13)  இரவு குறித்த வீட்டில் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர். 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலதிக  விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம் மட்டக்களப்பு - புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து பணம், தங்க ஆபரணங்களை திருடிய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.குறித்த வீட்டில் உள் நுழைந்த திருடர்கள் அலுமாரியில் வைக்கப்பட்டு இருந்த 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம், சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான  33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர். சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (13)  இரவு குறித்த வீட்டில் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.மேலதிக  விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement