• Aug 26 2025

18 வருடங்களின் பின்னர் தாயகம் திரும்பிய நபர்; கடற்படையினரின் தாக்குதலில் வைத்தியசாலையில் அனுமதி!

shanuja / Aug 25th 2025, 4:02 pm
image

இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர்  தாயகம் திரும்பிய குடும்பஸ்தரை கடற்படையினர் கடுமையாக தாக்கியதில் அவர்  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 


முல்லைத்தீவு உடையார் கட்டுப் பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன் என்ற இளம் குடும்பஸ்தர் 2007 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் கடல் மார்க்கமாக இந்தியா சென்றுள்ளார்.


பின்னர் கடந்த 18 வருடங்களாக இந்தியாவில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தாயம் திரும்ப முயற்சித்துள்ளார்.


இந்த நிலையில்  கடந்த 22 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு ஒன்றில் தலைமன்னார் பகுதியை  வந்தடைந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.


40 வயதுடைய குறித்த குடும்பஸ்தருக்கு இதய நோய் காணப்படுகின்ற நிலையில் அதற்கான மருத்துவ அறிக்கைகளையும் தன் வசம் எடுத்து வந்துள்ளார்.


எனினும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்ற கடற்படையினர் நோயாளியான குறித்த குடும்பஸ்தரை  மிலேச்சத்தனமாகத் தாக்கியுள்ளனர். 


அதன்பின்னர் குறித்த நபரை கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம்  ஒப்படைத்தனர். தலை மன்னார் பொலிஸார் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

 

பின்னர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட பதில் நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


இந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.


தனக்கான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் காண்பித்த போதும் கடற்படையினர் கடுமையாக தன்னைத் தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் உறவினர்கள் மற்றும் வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.

18 வருடங்களின் பின்னர் தாயகம் திரும்பிய நபர்; கடற்படையினரின் தாக்குதலில் வைத்தியசாலையில் அனுமதி இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர்  தாயகம் திரும்பிய குடும்பஸ்தரை கடற்படையினர் கடுமையாக தாக்கியதில் அவர்  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், முல்லைத்தீவு உடையார் கட்டுப் பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன் என்ற இளம் குடும்பஸ்தர் 2007 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் கடல் மார்க்கமாக இந்தியா சென்றுள்ளார்.பின்னர் கடந்த 18 வருடங்களாக இந்தியாவில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தாயம் திரும்ப முயற்சித்துள்ளார்.இந்த நிலையில்  கடந்த 22 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு ஒன்றில் தலைமன்னார் பகுதியை  வந்தடைந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.40 வயதுடைய குறித்த குடும்பஸ்தருக்கு இதய நோய் காணப்படுகின்ற நிலையில் அதற்கான மருத்துவ அறிக்கைகளையும் தன் வசம் எடுத்து வந்துள்ளார்.எனினும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்ற கடற்படையினர் நோயாளியான குறித்த குடும்பஸ்தரை  மிலேச்சத்தனமாகத் தாக்கியுள்ளனர். அதன்பின்னர் குறித்த நபரை கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம்  ஒப்படைத்தனர். தலை மன்னார் பொலிஸார் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட பதில் நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.இந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.தனக்கான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் காண்பித்த போதும் கடற்படையினர் கடுமையாக தன்னைத் தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் உறவினர்கள் மற்றும் வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement