யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் இன்று பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினரால் வத்திராயன் பகுதி முழுவதும் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இந்த சுற்றி வளைப்பில் 54 பொதிகள் அடங்கிய 103 கிலோகிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கஞ்சாவுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் இன்று பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினரால் வத்திராயன் பகுதி முழுவதும் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது. இந்த சுற்றி வளைப்பில் 54 பொதிகள் அடங்கிய 103 கிலோகிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கஞ்சாவுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.